தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2023 - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 17 March 2023

தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2023 - சிட்னி

தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.

இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.



தமிழ்ஒளி 2023 திட்டம் பற்றிய விபரங்கள்

========================================

தமிழ்ஒளி - உதவித் திட்டம் - டிசம்பர் 2023

இம்மாத திட்டத்தில் பின்வரும் உதவிகளை செய்துள்ளோம்

 01. கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் ஜேம்ஸ் (வீரச்சாவு 26-01-2009) அவர்களின் துணைவி மற்றும் தரம் 11 இல் கற்கும் அவரது மகள் ஆகியோரை கொண்ட குடும்பத்தினருக்கு ஆடுகள் வாங்குவதற்கான உதவி வழங்கப்பட்டது. இவர் போரின்போது ஒரு காலை இழந்துள்ளார். 

இதில் நான்கு மறி ஆடுகளும் இரண்டு சிறிய கிடாய் குட்டிகளும் வாங்கியுள்ளார்.

வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா

02. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவராகவன் என்ற முன்னாள் போராளிக்கான விசேட உதவிக்கான உதவியாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. இவருக்கு இரண்டு கண்பார்வையும் இல்லை. ஒரு மகள் இருக்கின்றார்.

03. வவுனியாவைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 11-11-1993) மாவீரர் ஒளியினியன் (வீரச்சாவு 20-04-2000) மாவீரர் புலிச்செல்வன் (வீரச்சாவு 14-01-2008) மற்றும் மாவீரர் தேன்விழி (வீரச்சாவு 06-03-2009) ஆகியோரின் 75 வயதான தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது.

04. கிளிநொச்சி - பரந்தனைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 05-03-2009) மற்றும் மாவீரர் ஆர்த்திகா (வீரச்சாவு 11-03-2009) ஆகியோரின் தந்தையார் 05-09-2023 அன்று சாவடைந்திருந்தார். அவர்களின் 73 வயதான தனித்து வாழும் தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது.

(குறிப்பு - கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி இன்னொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடாக நடைபெறுவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது)

டிசம்பர் மாத தமிழ்ஒளி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எமது நன்றிகள்.



========================================

தமிழ்ஒளி - உதவித் திட்டம் - நவம்பர் 2023

இம்மாத திட்டத்தில் பின்வரும் உதவிகளை செய்துள்ளோம்

 01. வவுனிக்குளம் மல்லாவியில் வசிக்கும் முன்னாள் போராளியான புலிக்கண்ணன் 1997 இல் சண்டையில் காயமடைந்து கையை இழந்தவர். தனது வாழ்வாதார உதவியாக ஆடுகள் வாங்கித்தரும்படி கோரிக்கை முன்வைத்திருந்தார். அதன்படி 5 ஆடுகளும் 3 குட்டிகளும் 1.5 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியுள்ளார். மேலதிக நிதியில் கொட்டகை போடவுள்ளார்.

வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா

02. யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார செலவுக்காக மாதாந்த உதவி ரூபா 20000 வழங்கப்பட்டது.

03. மட்டக்களப்பு - முறுத்தானை கிரானைச் சேர்ந்த மாவீரர் 2ம் லெப்ரினன்ற் நேசராசா (மாரிமுத்து கீர்த்திசீலன் வீரச்சாவு 26-09-1995)

அவர்களின் வாழ்வாதார முயற்சிக்கான உதவியாக, அவரது தம்பிக்கும் தாயாருக்கும், வயல் நிலத்தை குத்தகை எடுக்க 64000 ரூபாவும் விதை நெல் கொள்வனவு செய்வதற்கு 24000 ரூபாவும் ஏற்கனவோ வழங்கப்பட்டிருந்தது. தற்போது களைகளை அகற்றுவதற்கான மருந்து வாங்க 30000 ரூபா கடனாக எனினும் தரும்படி கேட்டிருந்தார். அதற்கமைவாக 30000 ரூபா வழங்கப்பட்டது.

04. மாவீரர் கலைமதி அவர்களின் தாயார் அண்மையில் சாவடைந்த நிலையில் அவரது இறுதி நிகழ்விற்கான உதவியாக 25000 ரூபா வழங்கப்பட்டது.

05. வவுனியாவைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 11-11-1993) மாவீரர் ஒளியினியன் (வீரச்சாவு 20-04-2000) மாவீரர் புலிச்செல்வன் (வீரச்சாவு 14-01-2008) மற்றும் மாவீரர் தேன்விழி (வீரச்சாவு 06-03-2009) ஆகியோரின் 75 வயதான தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது.

06. கிளிநொச்சி - பரந்தனைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 05-03-2009) மற்றும் மாவீரர் ஆர்த்திகா (வீரச்சாவு 11-03-2009) ஆகியோரின் தந்தையார் 05-09-2023 அன்று சாவடைந்திருந்தார். அவர்களின் 73 வயதான தனித்து வாழும் தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது.

நவம்பர் மாத திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எமது நன்றிகள்.



========================================

தமிழ்ஒளி - உதவித் திட்டம் - ஒக்ரோபர் 2023

இம்மாத திட்டத்தில் - சிட்னி வாழ் 30 உறவுகளின் பங்களிப்புடன் - பின்வரும் உதவிகளை செய்துள்ளோம். 

 01.முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான ரகு என்பன் போரில் காயமடைந்து ஒரு காலை இழந்துள்ளார். போரிற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர் விடுதலை ஆனவர். மீளவும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போதும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இவருக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தனது வாழ்வாதாரத்திற்காக கச்சான் பயிர்ச்செய்கை செய்வதற்கான உதவியை கோரியிருந்தார். இவருக்கான உதவி உடனடியாக வழங்கப்பட்டு கச்சான் விதைப்பு செய்யப்பட்டு, அவை தற்போது முளைத்துள்ளன.

வழங்கப்படட உதவி - 2 இலட்சம் ரூபா

02. கிளிநொச்சி - பரந்தனைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 05-03-2009) மற்றும் மாவீரர் ஆர்த்திகா (வீரச்சாவு 11-03-2009) ஆகியோரின் தந்தையார் 05-09-2023 அன்று சாவடைந்திருந்தார். அவர்களின் 73 வயதான தனித்து வாழும் தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000

03. வவுனியாவைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 11-11-1993) மாவீரர் ஒளியினியன் (வீரச்சாவு 20-04-2000) மாவீரர் புலிச்செல்வன் (வீரச்சாவு 14-01-2008) மற்றும் மாவீரர் தேன்விழி (வீரச்சாவு 06-03-2009) ஆகியோரின் 75 வயதான தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000

04. யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார செலவுக்காக மாதாந்த உதவி ரூபா 20000

இத்திட்டங்களிற்கான உதவிகளை செயற்படுத்த தொடர்ந்து பங்களிப்பை வழங்கிவரும் உறவுகளுக்கு எமது அன்பான நன்றிகள்.



========================================

தமிழ்ஒளி - உதவித் திட்டம் 30 - செப்ரம்பர் 2023

 1. மருத்துவப் போராளியான லம்போ அவர்களும் அவரது மனைவியும் ஒரு கண் பார்வை இழந்தவர்கள். வாழ்வாதார உதவியாக 138 கதிரைகளை கொள்வனவு கொள்வனவு செய்வதற்கான செலவாக 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது

2. கடந்த மாதம் மருத்துவ உதவி செய்யப்பட்ட, மட்டக்களப்பு - முறுத்தானை கிரானைச் சேர்ந்த மாவீரர் 2ம் லெப்ரினன்ற் நேசராசா (மாரிமுத்து கீர்த்திசீலன் வீரச்சாவு 26-09-1995)

அவர்களின் வாழ்வாதார முயற்சிக்கான உதவியாக, வயல் நிலத்தை குத்தகை எடுக்க 64000 ரூபாவும் விதை நெல் கொள்வனவு செய்வதற்கு 24000 ரூபாவும் வழங்கப்பட்டது.

3. யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார செலவுக்காக செப்ரம்பர் மாத உதவியாக 20000 ரூபா வழங்கப்பட்டது.

4. கிளிநொச்சி - பரந்தனைச் சேர்ந்த மாவீரர் அன்பு (வீரச்சாவு 05-03-2009) மற்றும் மாவீரர் ஆர்த்திகா (வீரச்சாவு 11-03-2009) ஆகியோரின் தந்தையார் 05-09-2023 அன்று சாவடைந்திருந்தார். அவர்களின் 73 வயதான தனித்து வாழும் தாயாருக்கான செப்ரம்பர் மாத உதவியாக 10000 ரூபா வழங்கப்பட்டது.

செப்ரம்பர் மாத திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எமது நன்றிகள்.



========================================

தமிழ்ஒளி - வாழ்வாதார உதவித் - ஓகஸ்ட் 2023 - திட்டம் 28

 

முன்னாள் போராளியான மணிவண்ணன், தாயகப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில், கடல்புலிகள் அணியில் இணைந்து நின்று போரில் ஒரு காலை இழந்துள்ளார். பின்னர் நிர்வாகப் பணிகளில் இறுதிவரை செயற்பட்டிருந்தார். போர் மொளனிக்கப்பட்ட பின்னர், எதிரிகளின் சிறைக்குச் சென்று 3 வருடம் இருந்து விடுதலையானதும் தனது ஊரான மட்டக்களப்பில் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


தனது காலை இழந்தமையால் தன்னால் கூலி வேலைகளிற்கு போக முடியாமல் உள்ளது என்றும், அதனால் சுயமுயற்சியில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகளை செய்தார். அவருக்கான மேலதிக உதவியாக இரண்டு இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு - முறுத்தானை கிரானைச் சேர்ந்த மாவீரர் 2ம் லெப்ரினன்ற் நேசராசா (மாரிமுத்து கீர்த்திசீலன் வீரச்சாவு 26-09-1995) அவர்களின் தாயாரின் கண்சிகிச்சைக்காக உதவியாக ரூ 155400 வழங்கப்பட்டது. சிகிச்சையின் பின்னர் அவரது கண்பார்வை முழுமையாக சீரடைந்துள்ளது.


இவரது கணவரும் ஒட்டுக்குழுவின் தாக்குதலால் தாக்கப்பட்டு சாவடைந்துள்ளார். 68 வயதான இவரை இவரது இன்னொரு மகன் கூலிவேலைசெய்து பராமரித்து வருகின்றார்.




========================================

ஜூலை 2023 - தமிழ்ஒளி - உதவித்திட்டம்


திருமலை - மூதூர் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த முன்னாள் போராளி குடும்பத்தைச் சேர்ந்த இவர், முள்ளந்தண்டில் காயமடைந்து 1.5 வருடகாலம் சிகிச்சை பெற்றவர். காயத்தினால் ஒரு கால் சிறிது கட்டை. இவருக்கு இரண்டு பிள்ளைகள். கணவரும் பிரிந்து சென்றுவிட்டார்.


இவரது தந்தை நாட்டுப்பற்றாளர். இரண்டு சகோதரர்கள் மாவீரர் (லெப். வாணன் - வர்ணகுலசிங்கம் அன்பழகன் - வீரச்சாவு 1998, கப்டன் வாணன் - வர்ணகுலசிங்கம் காளீஸ்வரன் - வீரச்சாவு 2009). இவர் இவரது தாயையும் பராமரித்து வருகிறார்.


ஆறு மாதத்தில் கன்று ஈனக்ககூடிய 7 லீற்றர் பால் கறக்க கூடிய பசுமாடு ரூ 185000 செலவில் வாங்கிக்கொடுக்கப்பட்டு, ரூ15000 நிதியாகவும் என ரூபா இரண்டு இலட்சம் வழங்கப்பட்டது.


இவ்வுதவியை பாடசாலை அதிபர் வழங்கி வைத்ததுடன், உதவித் திட்டத்திற்கான மேற்பார்வையையும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.



========================================

தமிழ்ஒளி - ஜூன் 2023 

வன்னி ஓமந்தையைச் சேர்ந்த முன்னாள் போராளி எரிமலை வாழ்வாதார உதவி திட்டமாக தூவல் பாசனத்திற்கு தேவையான உதவி கேட்டிருந்தார்.அதற்கான உதவி வழங்கப்பட்டு தூவல் பாசனத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார். 


இவர் இறுதிப்போர்க்காலத்தில் சண்டையில் ஈடுபட்டு ஒரு காலை இழந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.


திட்டச் செலவு - 2 இலட்சம் ரூபா


இத்திட்டத்தை நிறைவு செய்ய ஒத்துழைத்த அனைத்து பங்காளர்களுக்கும் எமது நன்றிகள்.




=====================================================

தமிழ்ஒளி - மே 2023

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளை கொண்ட முன்னாள் போராளி குடும்பம் ஒன்றுக்கான உதவிக் கோரிக்கை கிடைக்கப்பெற்றதை அடுத்து அவருக்கு கடைக்கான உதவியாக 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.



=====================================================

தமிழ்ஒளி - ஏப்ரல் 2023

மன்னார் மாவட்டம் தேவன்பிட்டியைச் சேர்ந்த முன்னாள் போராளிக்கான வாழ்வாதாரமாக அவரது கடையை மேம்படுத்த உதவி கோரப்பட்டிருந்தது.


அவருக்கு ஒரு கால் இல்லை. மற்ற காலிலும் அதிக காயங்கள். மூன்று பிள்ளைகள் அனைவரும் 2009 இற்கு பின்னர் பிறந்தவர்கள்.


நேரடியாக சென்றும் குடும்ப நிலை சரி பார்க்கப்பட்டு ரூபா இரண்டு இலட்சம் நேரடியாக அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு அவர் கடைக்கான பிறின்ரரும் வாங்கி பொருட்களும் வாங்கியுள்ளார்.



========================================


தமிழ்ஒளி - மார்ச் 2023


மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பம் ஒன்றின் வாழ்வாதார தேவைக்கான உதவியாக கடை மேம்படுத்தலுக்கான உதவி செய்யப்பட்டது. 


திட்டச் செலவு = இரண்டு இலட்சம் ரூபா




========================================

தமிழ்ஒளி - பெப்ரவரி 2023

வவனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளி குடும்பத்திற்கு கடை வைப்பதற்கான உதவி செய்யப்பட்டது. அந்த கிராமத்தில் வாழ்பவர்களுக்கு அந்த கடை மிகவும் அவசியமானதாகும்.


திட்டச் செலவு = இரண்டு இலட்சம் ரூபா




========================================

தமிழ்ஒளி - ஜனவரி 2023


வவுனியா வடக்கு ஒலுமடு நெடுங்கேணியைச் சேர்ந்த மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் புவனேஸ்வரி (சுப்பிரமணியம் மதியழகன் - 2ம் லெப்ரினன்ற் மதியழகன் வீரச்சாவு 18 - 07 - 1996) என்பவருக்கு வாழ்வாதார உதவியாக விவசாயம் செய்வதற்காக குழாய்கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டது.


இவ் உதவித்திட்டம் சிட்னியைச் சேர்ந்த 30 உறவுகளின் பங்களிப்பில் செய்யப்பட்டது.



========================


தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி


தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2021 - சிட்னி




No comments:

Post a Comment

Post Bottom Ad