தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.
இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
தமிழ்ஒளி 2023 திட்டம் பற்றிய விபரங்கள்
========================================
தமிழ்ஒளி - ஜனவரி 2023
வவுனியா வடக்கு ஒலுமடு நெடுங்கேணியைச் சேர்ந்த மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் புவனேஸ்வரி (சுப்பிரமணியம் மதியழகன் - 2ம் லெப்ரினன்ற் மதியழகன் வீரச்சாவு 18 - 07 - 1996) என்பவருக்கு வாழ்வாதார உதவியாக விவசாயம் செய்வதற்காக குழாய்கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டது.
இவ் உதவித்திட்டம் சிட்னியைச் சேர்ந்த 30 உறவுகளின் பங்களிப்பில் செய்யப்பட்டது.
========================
தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி
No comments:
Post a Comment