தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பான முறையில் மேற்கு அவுசுரேலியாவில் 18-05-2021 அன்று நடைபெற்றுள்ளது.
மாலை 07.05
மணிக்கு மடிங்டன் சமூக மண்டபத்தின் முன் பகுதியில் பொதுச்சுடரினை ஐயா சோமசுந்தரம்
(இலங்கை தமிழ்ச்சங்கம்) அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து அவுஸ்திரேலிய
பழங்குடிகளின் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. ஆனந்தன் அவர்கள் ஏற்றிவைக்க,
அவுஸ்திரேலிய தேசியக்கொடியை நாம் தமிழர் அமைப்பின் மேற்கு அவுசுரேலிய செயற்பாட்டாளர் திரு. கார்த்தி அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. யோன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறிலங்கா இராணுவத்தினால் சிதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்
நினைவு தூபியின் மாதிரி வடிவ தூபியில் செல்வி தர்சனா புஸ்பராசா அவர்கள் ஈகைச்சுடரினை
ஏற்றிவைத்தார்.
அடுத்து உயிர்நீத்த
உறவுகளை நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு அனைவரும் வரிசையாக சென்று மண்டபத்தினுள்
அமைக்கப்பட்ட மலர் வணக்க நினைவிடதத்தில் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து
" முள்ளிவாய்க்கால் முன்னர் யாருமறியா சாதாரண இடம்... பின்னர் நினைவுகளை தாங்கிய
பெரு விருட்சம்... நிழலில் தான் எமது உறவுகள்
உடமைகள் நினைவுகள் எல்லாவற்றையும் இழந்தோம்..." எனும் இனவழிப்பு நினைவு நாளின்
சிறப்புரையை இனப்படுகொலையின் சாட்சியாக இருந்த சிறுமி யதுர்சிகா அவர்கள் ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து
“முள்ளிவாய்க்கால் மண்ணில் மாண்டுபோன உறவுகள் நிலைகண்டு நெஞ்சடைத்து நிற்கின்றோம்” என்ற கவிதையை சிறுமி காணுஜா அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து சிறுமி
சிலானியரசி "முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று சொல்லி.. நீதியை பெறாமல் நித்திரை
இல்லை என ஒவ்வொரு தமிழனும் உறுதியெடு." எனும் கவிதையை வழங்கினார்.
தொடர்ந்து சிறுமி
தனஞ்ஜெயனி அவர்கள் "என் தாய் நிலம் எங்கே.. தமிழீழம் நாம் வாழ்ந்த தாய் நிலம்
கொத்துக்குண்டுகளால் குதறப்பட்டது...தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற கவிதையை
வழங்கினார்.
அதனை தொடர்ந்து
அவுசுரேலிய தமிழர் பேரவையின் மேற்கு அவுசுரேலிய நிர்வாகி திரு. நிமலகரன் அவர்கள் முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலையும் அதன் பின்னரான இனவழிப்பு தொடர்பாகவும் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து கந்தக
மலர்களின் உண்மை சம்பவங்களால் திரு சி.செ.புலிக்குட்டி அவர்களால் எழுத்துருவாக்கப்பட்ட "தடைகள் தகரும் தமிழீழம் மலரும்" என்ற
நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. நூல் தொடர்பான தனது அனுபவப்பகிர்வை திரு விமலாதித்தன்
அவர்கள் வழங்கி, நூலினை வெளியிட்டு வைக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி
திரு மாணிக்கவாசகர் அவர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் அவலங்களை
சுமந்த பதிவுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாலை 8.30 மணியளவில்
தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment