சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - அடெலெயிட் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 19 May 2022

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - அடெலெயிட்

இவ்வாண்டும் வழமைபோன்று மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் நிகழ்வு தென் அவுஸ்திரேலியாவில் மிக உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. ஓக்லான்ட் பாக் விநாயகர் ஆலய பண்பாட்டு
மண்டபத்தில் மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு, ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் தமது உறவினரை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்கால் வணக்கபீடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரினாலும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.


சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அகப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் இளையோர் ஒருவரினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


தொடர்ந்து கவிதைகள், பேச்சு, சிறப்புரை என்பன இடம்பெற்று 7 மணிக்கு தேசியக்கொடிகள் இறக்கலுடன் மண்டப நிகழ்வுகள் நிறைவுபெற்றன.


இரவு 7 மணிக்கு விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்ம சாந்திப்பூசை தொடர்ந்து 13வது வருடமாக நடைபெற்றது.

















No comments:

Post a Comment

Post Bottom Ad