சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 November 2022

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2022




தமிழீழ மக்களிற்கு சுதந்திரமான கௌரவமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக, அதற்கு தமிழீழத் தனியரசே உறுதியான வழியென கொண்டு, அதற்காக தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 27-11-2022 அன்று மாலை 5 மணியளவில் எதிர்பாராத பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டு, நிகழ்வுக்கான தயார்படுத்தல்களில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டபோதும், அதனையும் சவாலாக ஏற்று, அனைவரின் ஒத்துழைப்புடன் சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.


பொதுச்சுடரினை ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது 01-09-1997 அன்று வீரச்சாவடைந்த கப்டன். கண்ணகி அவர்களின் தாயாரும், 2009 மே 18 இறுதியுத்தத்தின்போது வீரச்சாவடைந்த தளபதி ஆரமுதன் அவர்களின்  சகோதரியான திருமதி. புஸ்பராணி மாணிக்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடியை கவுன்சிலர் Karen Pensabene, Deputy Mayor, Strathfield counci அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை Jason Yat Sen Li, State Member, NSW Parliament  அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திருமதி. அவனிதா வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரினை, முகமாலை பகுதியில் 07-10-2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் அக்பர் அல்லது வழுதி அவர்களின் மூத்த மகன் பிறைக்குமரன் பேரின்பராசா அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் 250 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஏற்றிவைத்தனர். 


அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.


தொடர்ந்து, மாவீரர் நாளிற்கான உறுதிமொழியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியகப்பொறுப்பாளர் ஜனா சிவராமலிங்கம் அவர்கள் வாசிக்க, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அதனை மீள உரத்துச்சொல்லி உறுதிமொழி மேற்கொண்டார்கள்.


தொடர்ந்து, கண்ணுக்குள்ளே வைத்து காத்திட்ட வீரரை மண்ணுக்குள்ளே வைத்தோம் என்ற தாயகப்பாடலை பாடகர் தேவா அவர்கள் பாடினார். அதனைத் தொடர்ந்து, மாவீரர் நாள் நினைவுப்பகிர்வை செல்வராசா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, விண்வரும் மேகங்கள் பாடும் என்ற தாயகப்பாடலை பாடகர் ஜெய்கரன் அவர்கள் பாடினார்.



தொடர்ந்து சிறார்கள் இளையோர்கள் பெரியவர்கள் இணைந்து நடனநிகழ்வை வழங்கினர். மாவீரர் தியாகம், அந்த தியாகத்திற்கான தேவை, சர்வதேசம் பார்த்திருக்க இனவழிப்பு நடைபெற்றமை, ஒற்றுமையாக இணைந்து நீதியை பெற்றுக்கொள்வோம் என்பதாக அமைந்த அந்நடனநிகழ்வு அமைந்திருந்தது. சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்நடனநிகழ்வு, ஆரம்பித்த சில செக்கன்களில், கடுமையான மழை ஆரம்பித்தபோதும் அம்மழைக்குள்ளே நின்று சிறியவர்கள் நடனநிகழ்வை செய்தமை அனைவர் மனதையும் தொட்டது.



இந்நடன நிகழ்வில் கலாநிதி யசோதரபாரதி சிங்கராஜர் அவர்களின் நெறியாழ்கையில்:


சிறிவேதா சிங்கராஜர்

வாகீஸ்வரன் தமிழரசன்

தமிழரசன் பரந்தாமன்

அக்சயா அரவிந்த்

லக்ஷ்மி மணி

நிசா அழகர்

றித்திகா கிருஸ்ணராஜ்

கிரிஸ்ணா ஞானராஜா

றேம்ருதா கருணைவேந்தன்

பிதுர்சிகா சிவராஜா

அக்சிகா சிவராஜா

திவாசினி சிவராசா

தஸ்வின் சிவராசா

புகழோவியன் காந்தரூபன்

கதிரவன் பேரின்பராசா

பிறைக்குமரன் பேரின்பராசா

பார்த்தீபன் செல்வகணேசன்



சிறிலஷ்மி (கீதா) அவர்களின் நெறியாழ்கையில்


துளசி யசிதரன்

கபினா ரமணன்

சயோன் சதீஸ்குமார்

வர்ணா சதீஸ்குமார்

பிரகதி சுனாந்தன்

சாமந்தி சிவரூபன்

சிறிசெல்வன் சிவரூபன்

கரிணி மணிராஜ்

ஓவியா மணிராஜ்

அபிரா அசோக்குமார்

லக்சரா செல்வகுமார்

அக்சயா கீதன்

அபிசயா மதிவதன்

தமிழ்நிலா சிவராம்

தமிழ்திவ்யா சிவராம்

மாயா யாதவன்

தியானா கணராஜா


ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


நிறைவாக உறுதியேற்றலுடன் தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டது. 


இந்நிகழ்வை திருமதி. நிதர்சினி செல்வகுமார், திரு. யாழவன், செல்வி. கதிரினி இரட்ணகுமார் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர். 


இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்  3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


























































































No comments:

Post a Comment

Post Bottom Ad