இந்த ஆண்டில் பிறந்த தமிழ்ப்பெயர் வைத்துள்ள குழந்தைகளை கௌரவிக்கும் முகமாக 5600 ரூபா வீதம் அவர்களது வங்கிக்கணக்கில் வைப்புசெய்வதற்கான திட்டம் நவம்பர் 26 சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 குழந்தைகளுக்கு இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்றைய மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட உதவியை சிட்னி தமிழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.
"தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம்" எனும் தொனிப்பொருளில் இரண்டாவது கட்டமாக அவுஸ்ரேலியா சிட்னி வாழ்மக்களின் பங்களிப்பில் தமிழர் தாயகமெங்கும் செயற்படுத்தப்படவுள்ள தூய தமிழில் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கான 5000 ரூபாய் பெறுமதியான் வங்கிக்கணக்கினை ஆரம்பித்து கையளித்தல் செயற்றிட்டம் வவுனியா மாவட்டத்திலுள்ள இருபத்தியிரண்டு குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு 18 - 12 - 2022 அன்று நடைபெற்றது.
No comments:
Post a Comment